News February 27, 2026

எப்ஸ்டீன் விவகாரத்தால் ‘WEF’ தலைவர் ராஜினாமா!

image

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணம் உலகை உலுக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பில்கேட்ஸ் முதல் இதில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிவந்ததை அடுத்து உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவர் போர்ஜ் பிரெண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். WEF-ன் கௌரவத்தைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Similar News

News March 2, 2026

1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

image

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.

News March 2, 2026

இபிஎஸ் அதிரடி.. செந்தில் பாலாஜி பதற்றம்

image

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், அதனை சரிசெய்யும் பொருட்டே EPS டெல்லி சென்றுள்ளாராம். திமுகவிற்கு உதவும் IAS, IPS அதிகாரிகள் பட்டியலை கொடுப்பதோடு அமைச்சர் KN நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், அமித்ஷாவிடம் EPS வலியுறுத்தவுள்ளாராம். இதனால் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!