News February 24, 2026
மயிலாடுதுறை இளைஞரை கைது செய்த கடலூர் போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்தவர் ஆனந்த்பாபு(34). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கிடைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ பிஎஸ்என்எல் காப்பர் ஓயர்களை திருடி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் பாபுவை கைது செய்தனர்.
Similar News
News February 25, 2026
மயிலாடுதுறை: ரூ.38,666 சம்பளத்தில் வங்கி வேலை

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 25, 2026
மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News February 25, 2026
மயிலாடுதுறை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? ஒரு CALL போதும்!

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


