News February 23, 2026

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறவும்

image

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானை விட்டு வெளியேறும்படி இந்தியர்களை மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்றவர்கள் உடனடியாக தூதரகத்தை உரிய ஆவணங்களுடன் அணுக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. +989128109115, +989128109109-ல் தொடர்புகொண்டு தூதரக உதவியை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

போர்.. இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு WARNING

image

இஸ்ரேலும், USA-வும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அங்குள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர காலத்தில் +972-54-7520711 எண்ணில் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

News February 28, 2026

காங்கிரசுக்கு ராஜ்ய சபா சீட்

image

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டிருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்ய சபா எம்பி சீட் தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கூறிய அவர், கையெழுத்துவிடுவது மட்டும்தான் நிலுவையில் உள்ளது என்றார். மேலும் எத்தனை தொகுதிகள் என்பது கையெழுத்திடும்போது தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

இனி மகளிர் உரிமைத் தொகை வராது..

image

நாளை மாதம் பிறக்கவுள்ளதால், மகளிர் உரிமைத் தொகையை நோக்கி பயனாளிகள் சிலர் காத்திருப்பர். ஆனால், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ₹3,000 & கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 தொகை மகளிரின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே வரவு வைக்கப்பட்டுவிட்டது. எனவே, அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது. உங்கள் நினைவூட்டலுக்காகவே இந்த பொறுப்பான பதிவு.

error: Content is protected !!