News January 31, 2026
தஞ்சாவூர்: தீராத நோய்கள் தீர்க்கும் அம்மன்!

கும்பகோணம் ஆலங்குடி சாலையில் சக்தி வாய்ந்த வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் பூரண குணமடைய அம்மனை வேண்டிக் கொண்டால் நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை. நோய் குணமடைந்ததும் பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தில் பாடையில் படுத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனை Share செய்யுங்கள்
Similar News
News February 10, 2026
தஞ்சை: கார் மோதியதில் பரிதாப பலி !

அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வீரைய்யா (67) இவர் நேற்று முன்தினம் மாலை தனது சகோதரி வசந்தாதேவி (69) என்பவரை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சென்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இவரது ஸ்கூட்டரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா தேவி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
News February 10, 2026
தஞ்சாவூர்: பல்வேறு துறையில் இலவச பயிற்சிகள் அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கல்வெட்டியியல், பனை சுவடியியல், அரிய கையெழுத்து சுவடிகள் போன்ற படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 35 வரை உடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதில் மாணவரகளுக்கு12 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
News February 10, 2026
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் 10.02.2026 (ம) 17.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் கல்வி கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அங்கன்வாடி மையங்கள் நடைபெறும் இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது


