News January 30, 2026

இராமநாதபுரம்: இரவில் ஆடுகளை திருடும் கும்பல்

image

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இது குறித்து காவல் இப்பகுதி மக்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News February 2, 2026

ராம்நாடு: கஞ்சா பதுக்கிய அண்ணன், தம்பி கைது!

image

உப்புளி அருகே மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பி வினோத் (33), தினேஷ் (30). இவர்கள் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் அவர்கள் வீட்டில் சோதனையிட்ட போது, பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News February 2, 2026

ராம்நாடு: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 2, 2026

ராம்நாடு: உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாப பலி!

image

திருஉத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (60). இவர் நேற்று அதிகாலை 2வது மகன் தீபக்கை ராமாநதபுரத்தில் நடைபெறும் ஹாக்கி பயிற்சிக்காக அழைத்துக் கொண்டு திருஉத்திரகோசமங்கையில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் வீடு நடந்து சென்ற போது அவ்வழியாக ராமநாதபுரம் நோக்கி சென்ற டிப்பர் மனல் லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புல்லாண் போலீசார் விசாரனை.

error: Content is protected !!