News May 5, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மயங்க் யாதவ் விலகல்

மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Similar News
News September 1, 2025
இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க ‘4’ டிப்ஸ்..

*வீட்டின் EB பில்லில் கவனமாக இருங்க. தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவி Off செய்யுங்கள்.
*அதிகமாக சமையல் பொருள்களை கொண்டு சமைத்து, அதனை யாரும் சாப்பிடாமல் வீணடிக்க வேண்டாம். *சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், அது பல நேரங்களில் உதவும்.
*பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருள்களோ வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப வாங்குங்கள். SHARE IT.
News September 1, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
பெற்றோர்களே உஷார்! Digital Dementia தெரியுமா?

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே Digital Dementia என்று வரையறுக்கின்றனர். ஞாபக சக்தி இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் focus செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் மாறுவார்களாம். SHARE IT!