News May 5, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மயங்க் யாதவ் விலகல்

மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Similar News
News December 10, 2025
இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்..

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST
News December 10, 2025
விஜய்க்கு சரியாக சொல்லி கொடுக்கவில்லை: நமச்சிவாயம்

புதுச்சேரியில் நேற்றைய மக்கள் சந்திப்பின் போது, அங்கு ரேஷன் கடைகளே இல்லை என விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு, 2016-ல் தற்காலிகமாக மூடப்பட்ட ரேஷன் கடைகள், 2024 முதல் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்க்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


