News May 5, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மயங்க் யாதவ் விலகல்

மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Similar News
News November 18, 2025
கார்த்திகை தீப திருவிழா.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு TN அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. டிச.3-ல் மலையில் மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். லட்சக்கணக்கானோர் கூடும் இந்த திருவிழாவிற்கு நெரிசலின்றி செல்ல, 4,764 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
News November 18, 2025
BREAKING: உலகம் முழுவதும் X தளம் முடங்கியது

பிரபல சோஷியல் மீடியாவான X தளம் உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். மாலை 5 மணிக்கு மேல் X தளத்தை சரியாக பயன்படுத்த முடியவில்லை என 10,000-க்கும் மேற்பட்டோர் இணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். சாட் என்ற புதிய வசதி X-ல் இன்று அறிமுகப்படுத்திய நிலையில், அந்த செயலி முடங்கியுள்ளது. உங்களால் X தளத்தை பயன்படுத்த முடிகிறதா என கமெண்டில் பதிவிடுங்கள்.
News November 18, 2025
21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை

இந்தியாவில் இன்றும் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் லடாக்கில் உள்ள மான் & மெராக் என்னும் 2 தொலைதூர கிராமங்களில் தனது சேவையைத் தொடங்கியது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் சுமார் 21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதிகபட்சமாக ஒடிசாவில் 6,000 கிராமங்களில் நெட்வொர்க் சேவை இல்லாமல் உள்ளன.


