News January 11, 2026
ஆட்சியில் பங்கு இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என <<18776060>>காங்.,<<>> நிர்வாகிகள் சிலர் பேசி வந்தனர். இந்நிலையில், TN-ல் ஆட்சியில் பங்கு கிடையாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் இதுவரை TN-ல் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை என்று கூறினார். இனிமேலும் இருக்காது என்று தெரிவித்த அவர், இதில் CM திட்டவட்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News February 3, 2026
வேலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் டிச.19 முதல் ஜன.30 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்காக மொத்தம் 62,802 விண்ணப்பங்கள் (நேரடியாகவும், இணையதளம் வழியாகவும்) பெறப்பட்டுள்ளன. இதில் புதியதாக பெயர் சேர்க்க (படி6) மட்டும் 39,170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனடிப்படையில் (பிப்17) புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 3, 2026
தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம்

நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற Coconut Promotion Scheme திட்டம் குறித்து FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். *தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம் வழங்கப்படும். *உயர்தர தென்னை மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். *தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஹைடன்சிட்டி பிளான்டேஷன் முறை ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
ராகுல் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்: கோயல்

அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். ராகுல் போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும், முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான அழுத்தங்களால் வணிக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் PM மோடி அடிபணிந்துவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.


