News January 6, 2026
தீபத்தூண் வழக்கில் TN அரசு மேல்முறையீடு செய்யும்: ரகுபதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டு காலத்தில் அது தீபத்தூண் என்பதற்கோ, அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றவர், ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தீபமேற்ற கோர்ட் அனுமதித்தது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்
Similar News
News February 4, 2026
விஜய்யிடம் இன்ஜினே இல்லை: அண்ணாமலை

NDA கூட்டணியை பற்றி விமர்சிக்கும் விஜய்யால், முதலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களிடம் டபுள் இன்ஜின் இருப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, விஜய்யிடம் இதுவரை இன்ஜினே பார்க்க முடியவில்லை எனக் கூறினார். மேலும், தன்னிடம் வண்டி, இன்ஜின், சேஸ், ஊற்றுவதற்கு பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லாமல் விஜய் பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
News February 4, 2026
ஹிந்தி திணிப்பால் இவற்றை காணவில்லை: PTR

பழமையான மொழிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பித்து கொண்டே இருக்க வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகம் விழாவில் பேசிய அவர், ஹிந்தி மொழி எங்கெல்லாம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பழமையான மொழிகள் காணாமல் போவதாக கூறியுள்ளார். மேலும், பழமையான மொழிகளை சிறப்பித்தால் மட்டுமே அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றார்.
News February 4, 2026
U19 WC: ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா?

ஜிம்பாப்வேவில் நடக்கும் U19 உலகக் கோப்பை தொடரின், 2-வது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. தொடரில் தோல்வியே தழுவாமல் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியா பேட்டிங், பவுலிங்கில் வலுவாக காணப்படுகிறது. ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக ஆடியதால் அந்த அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. போட்டியில் வெல்லும் ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.


