News January 6, 2026
விருதுநகர் அருகே இளைஞர் படுகொலை

காரியாபட்டி தாலுகா ஆவியூர் கிராமத்தில் இன்று காலை ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த இராசுதேவர் என்பவர் மகன் இராமசாமி (32) கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது அறிவித்த அரசு

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன. 16 அன்று வழங்க உள்ளார்.
News January 13, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)


