News January 5, 2026
சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘கொய்யா இலை தேநீர்’

கொய்யா இலை தேநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். மேலும் இது உடல்பருமனை கட்டுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவும்: எப்படி செய்வது: தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 4-5 புதிய கொய்யா இலைகளைச் சேர்க்கவும். 2-4 நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி, தேன் சேர்த்தால் ‘கொய்யா இலை தேநீர்’ ரெடி. SHARE IT
Similar News
News February 15, 2026
மகா சிவராத்திரி: இன்று சிக்கன், மட்டன் சாப்பிடாதீங்க!

இன்று மகா சிவராத்திரி தினத்தன்று மறந்தும் இந்த தவறுகளை செய்திடாதீர்கள்: கெட்ட வார்த்தை பேசக்கூடாது *இரவு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது *விரதத்தின் போது, சிக்கன், மட்டன் உள்ளிட்ட எந்த ஒரு அசைவ உணவும் சாப்பிடக்கூடாது *எந்த ஒரு தீயப்பழக்கமும் அதாவது மது, புகைப்பிடித்தல் கூடாது *இரவு விழித்திருக்க வேண்டும் என்பதற்காக பகலில் உறங்கக்கூடாது *சிவபெருமானுக்கு இளநீர் படைப்பதை தவிர்ப்பது நல்லது. SHARE IT.
News February 15, 2026
இந்த தேர்தல் MGR – நம்பியார் சண்டை: செல்லூர் ராஜு

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் MGR, நம்பியாரை புரட்டி எடுப்பது போல் திமுகவை EPS புரட்டி எடுப்பதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நம்பியாருக்கும் MGR-க்கும் இடையே நடக்கும் சண்டைபோல என்று தெரிவித்த அவர், அதிமுகவுக்கு பயந்துதான் திமுக மகளிருக்கு ₹5000 கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். திமுக தங்க கட்டியாக கொடுத்தால் கூட மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
OPS-க்கு TTV தினகரன் விடுத்த எச்சரிக்கை

தேர்தல் நெருங்கும் சூழலில் OPS இதுவரை கூட்டணி குறித்த தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. அம்மா ஆட்சி அமைய OPS உதவுவார் என தெரிவித்து வந்த TTV தினகரன் இப்போது பொறுமை இழந்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேச தொடங்கிவிட்டார். OPS உங்கள் கூட்டணியில் இணைவாரா என அவரிடம் கேட்ட போது, அம்மாவின் ஆட்சி அமைய விரும்புவோர் NDA-வில் இணையாவிட்டால் அவர்களது முகத்திரை கிழிந்துவிடும் என கூறியுள்ளார்.


