News May 2, 2024
சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்குட்பட்டது

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.
Similar News
News September 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 446 ▶குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ▶ பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
News September 2, 2025
இந்தியா வந்ததும் PM போட்ட போன் கால்

பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஜப்பான், சீனா சென்றுவிட்டு தாயகம் திரும்பிய PM மோடி, பஞ்சாப் CM பகவந்த் மான் சிங் உடன் தொலைபேசியில் நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ள பாதிப்புகள், நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.
News September 2, 2025
வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டில் 6.5% ஆக இருக்கும் என கிரிசில்(Crisil) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 6.5% ஆக இருக்க, 2025-26 முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், ஏற்றுமதியில் பாதித்தாலும், தனியார் நுகர்வு வளர்ச்சி அதிகரிப்பதால் வளர்ச்சி ஏற்றத்தில் இருக்குமாம்.