News May 1, 2024

1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை

image

1 கோடி முறை ‘கோவிந்த கோடி’ எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுதத் தொடங்கியதாக தெரிவித்த அவர், சிறுவயது முதலே ஏழுமலையானை இருவேளையும் வழிபடுவதாகக் கூறினார். ஆன்மிகத்தை வளர்க்க ‘கோவிந்த கோடி’ திட்டத்தை திருமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 1 கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்களுக்கு விஐபி தரிசன சலுகை அளிக்கப்படுகிறது.

Similar News

News August 27, 2025

BREAKING: மாணவர்களுக்கு புதிய பாடங்கள் சேர்ப்பு

image

அண்ணா பல்கலை., பொறியியல் படிப்புகளில் சில பாடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, BE, B.Tech-ல் AI பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், டேட்டா சயின்ஸ், தயாரிப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், வாழ்க்கை திறன்கள், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டங்களால், வேலைவாய்ப்பு, மேற்படிப்புகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

News August 27, 2025

அணில் Jungle என்றே கத்த வேண்டும்: சீண்டிய சீமான்

image

அடுத்த ஆண்டு பிப்.7-ல் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாடு எப்படி நடத்த வேண்டும், எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்பதை அங்கு பாருங்கள் என விஜய்யை சாடினார். மேலும், அணில் ஏன் Uncle Uncle என கத்துகிறது, Jungle Jungle என்று தானே கத்த வேண்டும் என கடுமையாக தாக்கி பேசினார். ஏற்கெனவே அணில் மரத்தில் இருக்க வேண்டும் என்று விஜய்யை விமர்சித்திருந்தார்.

News August 27, 2025

தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

image

TNHB-ல் வீடு வாங்கி தவணை கட்ட தவறியவர்களுக்கு அபராத வட்டியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. 2015 மார்ச் 31-ம் தேதிக்கு முன்னர், தவணை காலம் முடிந்த குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு இந்த சலுகை பொருந்தும். இது மார்ச் 31 2026 வரை அமலில் இருக்கும். தற்போது சென்னை, கோவை, திருச்சி மாவட்ட கலெக்டர்களும் பயனாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!