News April 30, 2024
இரவில் பைக் ஓட்டுவோர் கவனத்துக்கு

இரவில் பைக் ஓட்டுவோர் கண்ணைக் காக்கச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்படவும், பைக்கிலுள்ள லைட் வெளிச்சத்தைக் கண்டு வரும் பூச்சி கண்ணில் மோதி விழித்திரை காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பூச்சி வேகமாக மோதினால் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கண்ணைக் காக்கக் கண்ணாடி அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
Similar News
News November 19, 2025
தருமபுரியில் துடிதுடித்து பலி!

தருமபுரி: பெரும்பாலை அருகே உள்ள சானாரப்பட்டியைச் சேர்ந்தவர் அங்கப்பன்(45). தொழிலாளியான இவர், நேற்று தெண்ணை மரத்தில் ஏறியபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், அவரது குடும்பத்தார் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தும் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 19, 2025
மீண்டும் தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ்

Project Prometheus என்ற புதிய AI நிறுவனத்தின் இணை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்றுள்ளார். 6.2 பில்லியன் டாலர் நிதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனது Blue origin நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுகளுக்கு உதவும் என்று ஜெஃப் பெசோஸ் நம்புவதாகவும் கூறப்படுகிறது.
News November 19, 2025
மதுரையில் மெட்ரோ திட்டம் நிறுத்தம் – மெட்ரோ விளக்கம்.!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது, “மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை. திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.


