News December 22, 2025
தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News January 16, 2026
தஞ்சை: மருத்துவ மாணவன் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக 15 வயது சிறுமி ஒருவர் இருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சேலத்தை சேர்ந்த கோபிநாத் (35) என்ற 4-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவ மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News January 16, 2026
தஞ்சை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

தஞ்சை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 16, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன.15 இரவு 10 முதல் ஜன.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


