News April 30, 2024
இந்து, முஸ்லிம் அமைதியை சீர்குலைக்க முயற்சி

இந்து, முஸ்லிம் மக்களிடையேயான அமைதியை சீர்குலைக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சிப்பதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மாதேபுராவில் பிரசாரம் செய்த அவர், இந்து, முஸ்லிம் இடையேயான அமைதியை சீர்குலைக்க நினைத்தபோது, கூட்டணியை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார். ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 28, 2025
பஞ்சாப் பல்கலை.,யில் அமெரிக்க பொருள்களுக்கு தடை

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்தற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்சாபில் உள்ள Lovely Professional University அதன் அனைத்து கேம்பஸ்களிலும் அமெரிக்க குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதை அப்பல்கலை.,யின் வேந்தரும், ஆம் ஆத்மி MP-யுமான அஷோக் குமார் மிட்டல் அறிவித்துள்ளார். இந்தியா எந்த ஒரு அந்நிய சக்திக்கும் அடிபணியாது என இதன் மூலம் செய்தி அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்

*கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை
*புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்
*உள்ளத்தில் உள்ள லட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட வேண்டும்
*நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்
*சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது, நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
News August 28, 2025
No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?