News April 30, 2024
மணிப்பூர் சம்பவத்தில் போலீசார் உடந்தை

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடி ஒளிந்ததாகவும், காவலர்கள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
இந்த உயிரினத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

புகைப்படத்தில் நீங்கள் காண்பது தங்க மீன் அல்ல. இது சற்று வழக்கத்திற்கு மாறான சுறா மீன். கோஸ்ட் ரிகா நாட்டின் கடற்கரை பகுதியில் இந்த ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதெப்படி ஆரஞ்சு நிறத்தில் சுறா ? அதாவது உயிரினங்களின் தோலில் நிறமிகள் (மெலனின்) இழக்க தொடங்கினால் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம் அதிகமாக வெளிப்படும் எனவும் இது அரிதினும் அரிது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
News August 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 28, 2025
கலப்பு திருமணம் பாஜக ஆபிஸில் நடைபெறுமா? சீமான்

காதல் திருமணங்களுக்கு தங்களது கட்சி அலுவலகங்களை பயன்படுத்தலாம் என சிபிஎம் மற்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் பாஜக அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? அதைப் போன்று உயர் சாதி பெண்ணுக்கும், பட்டியல் சமூக பையனுக்கும் சிபிஎம் சார்பில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? என கேட்டுள்ளார்.