News December 16, 2025
குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.
Similar News
News January 21, 2026
குமரி: குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கல்லன்குழி மண்விளையை சேர்ந்த தம்பதியர் செல்வின் ஜெபகுமார் – எல்சி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் ஜன.18 அன்று வீட்டிலிருந்து சென்ற செல்வின் ஜெபகுமாரை காணவில்லை. இதையடுத்து நேற்று ஒட்டலிவிளை பகுதியில் உள்ள குளத்தில் இவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
நாகர்கோவில்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, ராமவர்மபுரம், சரலூர், இந்து கல்லூரி, வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT.
News January 20, 2026
குமரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(20.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .


