News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.
Similar News
News March 22, 2026
கோவையில் வசமாக சிக்கிய ரூ.5.77 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.5.77 லட்சம் பறிமுதல் செய்தனர். கோதபாளையம் பகுதியில் ரஷ்வந்த் என்பவரிடம் ரூ.50,500, கரவழிமாதப்பூர் பகுதியில் ராமசாமி என்பவரிடம் ரூ.50,100, பள்ளபாளையம், காயத்ரி அவென்யூ பகுதியில் கவுதம் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 900, கள்ளப்பாளையம் பகுதியில் ராம் என்பவரின் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம், சீலியூரில் கணேசன் என்பவரிடம் ரூ.59 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது.
News March 22, 2026
1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
News March 22, 2026
10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


