News April 26, 2024
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில், ரமேஷ் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரமேஷ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 4, 2026
கள்ளக்குறிச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News March 4, 2026
மணலூர்பேட்டையில் பேரூராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா

மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆட்சியர் பிரசாந்த் ரிப்பன் வட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் இயக்குனர் முகமது ரிஜ்வான், செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் பேரூர் திமுக செயலாளர் ஜெய்கணேஷ் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க


