News April 26, 2024
நாவல் பழ சர்பத் செய்வது எப்படி?

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கல், செரிமான பிரச்னைகளுக்கு
நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது நாவல் பழம். உடலுக்கு குளிர்ச்சியை தரும் நாவல் பழ சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் நாவல் பழ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News January 28, 2026
விஜய் ஜெ.,வை சந்தித்ததில் என்ன தவறு? நாஞ்சில் சம்பத்

அழுத்தத்திற்கு அடிபணிகிறவன் நான் இல்லை என்று பேசிய விஜய்யை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று சாடிய அவர், படம் வெளிவருவதில் உள்ள இடையூறை போக்க அதிகாரத்தில் உள்ள முதல்வரை (ஜெ.,) சந்தித்து தீர்வு கேட்டால், அது பஞ்சமா, பாதகமா? என்று கேட்டுள்ளார்.
News January 28, 2026
’10-3-2-1-0′ தூங்கும் முறை தெரியுமா?

இரவில் நன்றாக தூங்க இந்த ’10-3-2-1-0′ முறை உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். படுக்கைக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காபி குடிப்பதையும், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதையும், படுக்கைக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும். படுக்கைக்கு 1 மணி நேரத்திற்கு முன் போனை ஓரம் வைத்துவிட்டு, 0 – காலை அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் உறங்காமல் எழுந்திருங்கள்.
News January 28, 2026
கோவாவில் சிறுவர்களுக்கு SM-ஐ தடை செய்ய பரிசீலனை

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்க கோவா அரசு பரிசீலனை செய்து வருகிறது. SM பயன்பாட்டால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாக உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவாவிலும் சாத்தியம் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார்.


