News November 25, 2025
மயிலாடுதுறை அருகே பெண் கைது

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மணல்மேடு காவல் சரகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே கொற்கை சாலை தெரு பகுதியில் விஜயகுமார் என்பவரது மனைவி சங்கீதா (39) விற்பனைக்காக 200 பாண்டி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து, அவற்றை பறிமுதல் செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 22, 2026
மயிலாடுதுறை: முன்னாள் MLA தலைமையில் ஐக்கியம்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். இந்நிகழ்வில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி ஜி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
News March 22, 2026
மாயவரம்: டிராக்டர் மோதி பெண் உடல் நசுங்கி பலி

சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி(55). இவர் தனது உறவினருடன் மேல தேனூர் அருகே உள்ள கோவிலுக்கு நேற்று சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது கொண்டல் கிராமத்தில் எதிரில் வந்த டிராக்டர் மோதியதில், மீனாட்சி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
News March 22, 2026
மாயவரம்: ஆன்லைனில் ரூ.13 லட்சம் மோசடி – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் துபாயில் டிரைவராக பணிபுரிகிறார். இவரிடம் சமூக வலைதளம் மூலம் பழகிய நபர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கவியரசன்(24) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.6,86,433 பறிமுதல் செய்தனர்.


