News November 23, 2025

செங்கல்பட்டு: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News February 20, 2026

செங்கல்பட்டு: மின்சார ரயில்கள் மாற்றம்!

image

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (பிப்.20) முதல் ஏப்.5ஆம் தேதி வரை சில புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 05.45 மணி முதல் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

வண்டலூர் அருகே அதிரடி கைது!

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், மறைமலைநகரில் தங்கி, கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்ததில் ஹரி(20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

News February 20, 2026

செங்கல்பட்டில் பயங்கர விபத்து!

image

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார், முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!