News April 25, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
ராணிப்பேட்டையில் 113 பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்மன் ஜமாலின் உத்தரவின் பேரில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 113 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
News January 19, 2026
ராணிப்பேட்டை: கோயில் சென்றவருக்கு 16 சவரன் விபூதி!

கலவை அடுத்த சப்தார்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்சர் (42). இவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி மழையூர் கிராம கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். விழா முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்த 16 பவுன் நகை திருடபட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 19, 2026
ராணிப்பேட்டை: சிறுவன் துடிதுடித்து பலி

மாங்குப்பத்தை சேர்ந்தவர்கள் கீர்த்திவாசன் (15), அருண்குமார், பார்த்தசாரதி. இவர்கள் 3 பேரும் நேற்று (ஜன.18) இருசக்கர வாகனத்தில் ரசூல் பேட்டை சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் மூவரும் படுகாயமடைந்தனர். இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கீர்த்திவாசன் நேற்று (ஜன.18) உயிரிழந்தார்.


