News October 25, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (24.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.13) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
News February 13, 2026
கிருஷ்ணகிரியில் தூக்கிட்டு தற்கொலை!

மத்திகிரி அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு தொடர் குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருடைய குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு அவருடைய மகள் தனியாக சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று (பிப்.12) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 13, 2026
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி என்பவருடைய மகன் 2 வயது ருத்ரன் நேற்று பிப்-12 விட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக பெற்றோர் அவரை தேடி பார்த்தபோது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


