News October 19, 2025
ஈரோடு: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது கொடிவேரி அணைக்கட்டு ஆகும் தற்பொழுது அதிகப்படியான வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் பாதுகாப்பு கருதி நீர்வளத்து துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் குளிப்பதற்கும், படகு சவாரி செல்வதற்கும், மீன்பிடிப்பதற்கு இன்று ஒரு நாள் தடை விதித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 22, 2026
ஈரோட்டில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

ஈரோடு மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே<
News March 22, 2026
ஈரோடு அருகே அரங்கேறிய கத்தி குத்து சம்பவம்: இருவர் கைது!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல், பெருந்துறையில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு மது போதையில் இருந்த அக்கா கணவர் செல்வம் மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் குத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சிகோவில் போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 22, 2026
ஈரோட்டில் அதிரடி மாற்றம்!

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, காவல்துறை சார்பில் மார்ச் 30 காலை முதல் 31 மாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்கள் டி.ஜி.புதூர், கடம்பூர், ஆசனூர் வழியாகவும், கனரக வாகனங்கள் அந்தியூர், பர்கூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன. கார், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களுக்குத் தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. SHAREIT


