News October 18, 2025
மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழகம், புதுவை மீனவர்கள் கைதை கண்டித்து, வரும் 27-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே 180 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 18, 2025
லட்சியமா? காதலா? சமந்தா அட்வைஸ்

லட்சியம் (அ) பார்ட்னர், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது நியாயமற்றது என சமந்தா கூறியுள்ளார். உங்களுடைய லட்சியங்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஒரு பார்ட்னரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நாம் அதிகமாக கவலைப்படுவது பார்ட்னர் உள்ளிட்ட உறவுகளை பற்றித்தான் எனவும் கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.
News October 18, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.