News April 17, 2024
தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்கும் பாலகிருஷ்ணா!

தெலுங்கு திரையுலகின் ரசிகர்களால் காட் ஆஃப் மாஸ் என்றழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்டிமென்ட் ஆக்ஷன் பாணியிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த அவர் தனது பார்வையை கோடம்பாக்கத்தின் இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதைக் களத்தில் நடிக்க அவருக்கு ஆசை இருப்பதாகக் கூறியுள்ளாராம்.
Similar News
News November 10, 2025
வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.
News November 10, 2025
உதடுகள் கருப்பா இருக்கா? TRY THIS!

மென்மையான, இளஞ்சிவப்பு உதடுகளை பெற நிறைய ஈஸியான வழிமுறைகள் உள்ளன. ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் ➤Lip Balm பயன்படுத்துங்கள் ➤உதடுகளை கடிப்பதை தவிர்க்க வேண்டும் ➤புகைப்பழக்கம் இருந்தால் அதனை கைவிடுங்கள் ➤தேன் & சர்க்கரையை கலந்து உதட்டில் தடவிப்பாருங்கள். அனைவருக்கும் யூஸ் ஆகட்டுமே. SHARE THIS
News November 10, 2025
திருப்பதி லட்டில் நெய்க்கு பதில் பாமாயில் கலப்படம்

கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திரா CM குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து SIT அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் லட்டில் நெய்க்கு பதில், அதிகமாக பாமாயில் கலந்திருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இதை சப்ளை செய்த Bholebaba Dairy நிறுவனத்தின் இயக்குநர் அஜய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.


