News October 16, 2025

BREAKING: மகளிர் உரிமை தொகை.. புதிய அறிவிப்பு

image

சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார். 1.14 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத் தொகை திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், டிச.15-ம் தேதி முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் உதயநிதி அறிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

image

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

News October 17, 2025

அக்டோபர் 17: வரலாற்றில் இன்று

image

*உலக வறுமை ஒழிப்பு நாள். *1892 – சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள். *1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாஜி ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். *1970 – அனில் கும்ப்ளே பிறந்தநாள். *1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. *1981 – கவிஞர் கண்ணதாசன் இறந்தநாள். *1992 – நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.

News October 17, 2025

NDA கூட்டணி CM வேட்பாளர் நிதிஷ் இல்லையா?

image

பிஹாரில் தேர்தல் முடிந்த பிறகே CM யார் என்பதை கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் தான் CM வேட்பாளர் என்பதை உறுதி செய்ய தனக்கு அதிகாரம் இல்லை எனவும், தற்போதைக்கு அவரது தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், கடந்த முறை சீனியாரிட்டி, மரியாதைக்காக நிதிஷ்குமார் CM-ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!