News October 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. நாளை ரெடியா இருங்க!

சுமார் 1.15 கோடி பேருக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 தவணையாக ₹1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், 26-வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீதான கள ஆய்வையும் அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படும். SHARE IT.
Similar News
News December 7, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP
News December 7, 2025
SIR படிவம் கொடுத்தவர்களின் கவனத்திற்கு..

SIR படிவம் கொடுத்தாச்சு, நம்ம வேலை முடிஞ்சுது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். உங்க படிவத்தை SIR அலுவலர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறாரா என்பதை செக் பண்ணுங்க. அதற்கு, <


