News October 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. நாளை ரெடியா இருங்க!

சுமார் 1.15 கோடி பேருக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 தவணையாக ₹1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், 26-வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீதான கள ஆய்வையும் அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படும். SHARE IT.
Similar News
News November 17, 2025
WTC : 4-வது இடத்திற்கு இந்தியா சறுக்கல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. நடப்பு WTC-ல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 3 தோல்வி, ஒன்றில் டிரா கண்டுள்ளது. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன.
News November 16, 2025
இன்ஸ்டாவில் சூறாவளியாய் சுற்றும் PHOTOS

இமாச்சலில் நடைபெறும் ‘ரௌலானே’ என்னும் திருவிழாவின் புகைபடங்கள் SM-யில் சூறாவளியாக சுற்றி வருகிறது. X தளத்தில் ஒருநபர் பதிவிட, பின்னர் அதை பல்வேறு SM பயனர்களும் பதிவிட தொடங்கினர். அனைவரின் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தை தூண்டிய இந்த திருவிழா, மார்ச் மாதத்தில் ஹோலிக்கு பின்னர் நடத்தப்படுகிறது. டிரெண்டிங்கில் உள்ள போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 16, 2025
பிரபல நடிகை காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

பிரபல பெங்காலி நடிகையான பத்ரா பாசு (65) கொல்கத்தாவில் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பிரபல நாடக இயக்குநரும் நடிகருமான அசித் பாசுவின் மனைவியாவார். வங்கா நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


