News April 16, 2024
பிரசார களத்துக்கு வராத காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள செல்வ பெருந்தகை, கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவருக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவனையும், ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் பிரசார களத்தில் காண முடியவில்லை. இதைக் கண்ட காங்கிரசார், பதவிக்கு மட்டும் வருவார்கள், பிரசாரத்துக்கு வர மாட்டார்களா என குமுறுகின்றனர்.
Similar News
News November 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
News November 15, 2025
பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.
News November 15, 2025
தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்: கார்கே

பிஹார் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக CONG தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை கண்டு CONG தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தைரியம், அர்ப்பணிப்புடன் நீண்ட கால போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு வாக்களித்த பிஹார் மக்களுக்கு இதயபூர்வமான நன்றி, ஜனநாயகத்தை காப்பதற்கான தங்களது பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.


