News April 16, 2024

பிரசார களத்துக்கு வராத காங்கிரஸ் தலைவர்கள்

image

காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள செல்வ பெருந்தகை, கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவருக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவனையும், ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் பிரசார களத்தில் காண முடியவில்லை. இதைக் கண்ட காங்கிரசார், பதவிக்கு மட்டும் வருவார்கள், பிரசாரத்துக்கு வர மாட்டார்களா என குமுறுகின்றனர்.

Similar News

News November 14, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக, ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஒசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் S.புருசோத்தமரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

News November 14, 2025

ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற ஆணையம்

image

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவக்கொலைகளை தடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தலைவராகக் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி V.பழனிக்குமார், S.ராமநாதன் (IPS) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 3 மாதங்களில் பரிந்துரைகளை வழங்கும்.

News November 14, 2025

தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

image

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!