News October 14, 2025
எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. நாளை ரெடியா இருங்க!

சுமார் 1.15 கோடி பேருக்கு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 25 தவணையாக ₹1,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், 26-வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் மீதான கள ஆய்வையும் அரசு தொடங்கியுள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணம் டெபாசிட் செய்யப்படும். SHARE IT.
News October 14, 2025
பெளர்ணமி நிலவாய் பிரகாசிக்கும் ருக்மினி!

‘என் மூச்சவ பேச்சவ, பேர் சொல்லும் அழகவ, எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ’ என்ற ‘டியூட்’ பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களை ரிபீட் மோடில் பாட வைத்துவிட்டார் ருக்மினி வசந்த். மூன்றே படத்தில் ரசிகர்களின் மனதில் அடுத்த 30 வருடங்களுக்கு குடியேறிவிட்ட அவர், புதிய போட்டோஷுட் நடத்தி SM-ல் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹார்ட் பதிவிடும் ரசிகர்கள், அடுத்த தமிழ் படத்தின் அப்பேட் கேட்டு அன்பு தொல்லை கொடுக்கின்றனர்.
News October 14, 2025
RBI-யின் புதிய Digital money: பேமென்டுக்கு NO இண்டர்நெட்

இண்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் UPI பேமண்ட் செய்ய முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காகவே RBI புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது ‘ஆஃப்லைன் டிஜிட்டல் ரூபாய்’ என்ற திட்டத்தின் மூலம் Digital money-ஐ நிஜமான பணத்தை போலவே பயன்படுத்தலாம். UPI ஸ்கேனர் மூலம் இந்த பணத்தை செலுத்தலாம். இண்டர்நெட் கிடைத்தவுடன் பணம் RBI கணக்கில் வரவு வைக்கப்படும். SHARE IT.