News April 16, 2024
ரன்களை வாரி வழங்கி சாதனை படைத்த புவனேஷ் குமார்

ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 3 முறை 50+ ரன்களை விட்டுக்கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார். இவர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 51, மும்பைக்கு எதிராக 53, பெங்களூருக்கு எதிராக 60 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த 3 ஆட்டங்களிலும் அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 15, 2025
கவர்னர் மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் R.N.ரவி மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட பலருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, காந்தி நினைவிடத்திற்குச் சென்று பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். <<-se>>#HappyIndependenceday<<>>
News August 15, 2025
‘கூலி’ OTT ரிலீஸ் அப்டேட்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரவாரமாக வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் <<17409522>>வசூலில் <<>>பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத நிலை உள்ளது. அவர்கள் படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ள நிலையில், படம்
செப்டம்பரில் முதல் வாரத்தில் OTT-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. நீங்க படத்தை எதில் பார்க்க போறீங்க?
News August 15, 2025
Made in India சோஷியல் மீடியாக்கள்: மோடி அழைப்பு

‘தற்சார்பு இந்தியா’ என்பதே மோடியின் சுதந்திர தின உரையின் சாராம்சமாக இருந்தது. குறிப்பாக, வலுவான சோஷியல் மீடியா தளங்களை உருவாக்க இந்திய இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற வெளிநாட்டு App-களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதேநேரம், ShareChat, Moj, Koo போன்ற Made in India தளங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?