News April 16, 2024
ரன்களை வாரி வழங்கி சாதனை படைத்த புவனேஷ் குமார்

ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 3 முறை 50+ ரன்களை விட்டுக்கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார். இவர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 51, மும்பைக்கு எதிராக 53, பெங்களூருக்கு எதிராக 60 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த 3 ஆட்டங்களிலும் அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
எல்லாருக்கும் ஐடியா கொடுத்தாரு… ஆனா அவருக்கு?

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-7 இடங்கள் வெல்லும் என்றும், 9 – 13% வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரிய கட்சிகளுக்கு எல்லாம் வியூகம் வகுத்துக் கொடுத்து வெற்றிபெற வைத்த பிரசாந்த் கிஷோரால், தன் கட்சிக்கு வெற்றியை தரமுடியவில்லை எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்களின் கருத்து?
News November 11, 2025
தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை, நவ.13-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் அவர் பெறவுள்ளார். 2 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்டவற்றை வென்ற அவரது கலைப் பயணத்தில் செவாலியே விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தோட்டா தரணிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 11, 2025
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஈஸி டிப்ஸ்!

தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஈஸியான வழி இருக்கிறது. ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து, அதனுடன் மிளகு, தேன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொடுங்கள். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். குழந்தைகளை நோயிலிருந்து காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


