News October 11, 2025
பணமதிப்பு நீக்கத்தால் கடனை கட்டவில்லை: நடிகர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என ஷில்பா ஷெட்டியின் கணவரும் நடிகருமான ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு காரணமாக தனது வீட்டுப் உபயோகப் பொருட்கள் வியாபாரம் கடும் நஷ்டத்தை சந்தித்தாக அவர் கூறியுள்ளார். ₹60 கோடி ரூபாய் மோசடி புகாரில், ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மும்பை போலீசிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 11, 2025
திமுகவால் இதற்கு சத்தியம் செய்ய முடியுமா? நயினார்

இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என திமுகவினரால் சத்தியம் செய்ய முடியுமா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் கவர்னருடன் தான் போராடுகிறது என <<17948339>>உதயநிதி<<>> கூறியதற்கு கண்டனம் தெரிவித்த நயினார். RN ரவியை விமர்சிப்பதற்கு உதயநிதிக்கு என்ன தகுதியுள்ளது என்றும் காட்டமாக கேட்டுள்ளார். கவர்னர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News October 11, 2025
EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலையவிடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.
News October 11, 2025
உதயநிதி தலைமறைவு.. சர்ச்சை வெடித்தது

#Rowdytime என தனது செல்ல நாயுடன் DCM உதயநிதி SM-ல் பதிவிடும் போட்டோ இன்று சர்ச்சையாக வெடித்துள்ளது. முன்னதாக செப்.20, 27-ல்(சனிக்கிழமை) நாயுடன் விளையாடும் போட்டோக்களை தனது முகத்துடன் பதிவிட்டிருந்தார். இன்று தலை மறைத்ததுபோல் இருப்பதால் விஜய்யை மறைமுகமாக கூறுகிறார் என ஒரு தரப்பினர் சண்டையிட்டு வருகின்றனர். அதேநேரம், திமுக ஆட்சியின் அவலங்களால் தலைமறைவாக இருப்பதாக அதிமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.