News April 15, 2024
பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
IND-ஐ எதிர்கொள்ளும் டெஸ்ட் படையை அறிவித்த WI

IND vs WI மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் அக்., 2 முதல் 14-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான, 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸி., உடனான சமீபத்திய தோல்வியை அடுத்து, அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபால், அலிக் அதனாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழல் பந்து வீச்சாளரான கேரி பியர்ரி புதிதாக அறிமுகமாக உள்ளார்.
News September 17, 2025
ராகுலை புகழ்ந்த EX பாக்., வீரர்: பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை EX பாக்., கிரிக்கெட் வீரர் <<17729515>>அஃப்ரிடி<<>> பாராட்டியதை பாஜக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாக ராகுல் மாறிவிட்டதாகவும், அந்த மக்கள் அவரை தலைவராக ஏற்க கூட தயக்கம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சாடியுள்ளார். இதற்கு, அஃப்ரிடியுடன் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காங்., பதிலடி கொடுத்துள்ளது.
News September 17, 2025
பெரியார் பொன்மொழிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. *பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. *தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும். *ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அதேபோல் மற்றவர்களிடமும் அவன் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். *கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.