News April 15, 2024

பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

image

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 29, 2025

அஃப்ரிடிக்கு தரமான பதிலடி கொடுத்த தவான்

image

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடே பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்ற அஃப்ரிடிக்கு ஷிகர் தவான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுடைய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வதாகவும், ஏற்கனவே கார்கில் போரில் உங்களை தோற்கடித்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவுதான் கீழே செல்வீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மற்ற நாடுகள் குறித்து பேசாமல் சொந்த நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 29, 2025

அட்சய திருதியை நல்ல நேரம் எப்போது?

image

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நன்மை என்று நமக்கு தெரியும். ஆனால், எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பது தெரியுமா? நாளை (29.04.2025) மாலை 5.31 மணி முதல் 30.04.2025 மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. அதில், புதன்கிழமை (30.04.2025) அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். அப்போது தங்கம் வாங்கினால், வாழ்வில் இன்பம் பெருகும்.

News April 29, 2025

PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

image

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.

error: Content is protected !!