News October 1, 2025

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

image

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(அக்.2) டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன. மேலும், விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சந்தையில் பதுக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News October 2, 2025

ஒரே நாளில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக NCRB அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2023-ல் ஒரு நாளில் 175 திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 100 உயிரிழப்புகள் மாரடைப்பால் நிகழ்ந்தவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-ல் 35,637 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், TN-ல் 1,711 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க..

News October 2, 2025

NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்த மஸ்க்.. ஏன்?

image

இயக்குநர் ஹமீஷ் ஸ்டீலை பணியமர்த்தியதால், NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை ஆதரித்த ஹமீஷ், சார்லி ஒரு நாஜி என கூறியிருந்தார். சார்லியின் கொலையை கொண்டாடிய ஒருவரை NETFLIX பணியமர்த்தினால், தன்னுடைய பணம் ஒரு பைசா கூட அந்நிறுவனத்திற்கு செல்லாது என காட்டமாக கூறியுள்ளார்.

News October 2, 2025

2 குழந்தைகளுக்கு எமனாக மாறிய இருமல் சிரப்

image

ராஜஸ்தானில் இருமல் சிரப் (dextromethorphan hydrobromide) குடித்த 2 குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, 10-க்கு மேற்பட்ட குழந்தைகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். புகாரை தொடர்ந்து மருந்தில் தவறில்லை என நிரூபிக்க சிரப்பை குடித்த டாக்டரும் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மருந்து நிறுவனமான கெய்சன் பார்மா மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

error: Content is protected !!