News October 1, 2025
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

2023-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ஐ காட்டிலும் 9.2% அதிகம் என NCRB அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு லட்சம் குழந்தைகளில் 39.9 பேர் குற்றங்களுக்கு உள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. 2021-ல் 1,49,404 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022-ல் 1,62,449 ஆக உயர்ந்திருந்தது.
Similar News
News October 1, 2025
விஜய்தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி

போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோதுதான், மின் விநியோகம் தடைபட்டது. ஜெனரேட்டர் ஆஃப் ஆனபோதும், தெருவிளக்குகள் அணையவில்லை; மின் விநியோகம் இருந்தது எனக் கூறிய அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
News October 1, 2025
கரூர் விவகாரத்தில் சதி உள்ளது: அதிமுக MP இன்பதுரை

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சதி உள்ளதாகவும், அரசின் தவறே மக்கள் உயிரிழக்க காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் சாபக்கேடு தற்போது டிஜிபியே இல்லாதது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News October 1, 2025
முற்றிலுமாக முடங்கிய அமெரிக்க அரசு

செலவினங்கள் தொடர்பான மசோதா செனட் சபையில் நிறைவேறாததால், அமெரிக்கா முடங்கியுள்ளது. மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவைப்படும் நிலையில் டிரம்பின் அரசுக்கு 55 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா ஷட் டவுன் ஆவது இதுவே முதல்முறையாகும்.