News September 30, 2025

அக்.2 அன்று பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

image

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.

Similar News

News October 1, 2025

காசாவை நிர்வகிக்கவுள்ளாரா UK முன்னாள் பிரதமர்?

image

டிரம்ப்பின் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பில் பதில் தரப்படவில்லை. இதனிடையே, டிரம்ப் திட்டப்படி, காசா ஒரு சர்வதேச இடைக்கால அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இந்நிலையில், காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பை UK முன்னாள் பிரதமர் பிளேரிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்தால் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் என்றும் கூறப்படுகிறது.

News October 1, 2025

USA அமைச்சர் பதிலடி வேண்டாம் என்றார்: ப.சிதம்பரம்

image

பயங்கரவாதத்துக்கு எதிராக காங்., அரசு மென்மையாக நடந்துகொண்டது என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அப்போதைய USA வெளியுறவு அமைச்சர் பாக்.,க்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறினார். மேலும், அரசின் பலம், பலவீனத்தால் பதிலடி கொடுக்க முடிவெடுக்கவில்லை என்றார்.

News October 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 475 ▶குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். ▶பொருள்: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

error: Content is protected !!