News September 30, 2025

போலீஸிடம் இருந்து பெண்களை காப்பாற்றும் நிலை உள்ளது: EPS

image

திருவண்ணாமலையில் இரு காவலர்கள், இளம் பெண்ணை அவரது சகோதரி கண் முன்னரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே, தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு, பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 30, 2025

WC: இந்திய அணி ஏமாற்றம்

image

பெண்கள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 37 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், நிதானமாகவே ஆடி வருகின்றனர். பிரதிகா ராவல் -37, ஹார்லின் டியோல் -48 ரன்கள் எடுத்தனர். ஸ்மிரிதி 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தற்போது தீப்தி சர்மா (31), அமஞ்சோத் கவுர் (37) களத்தில் உள்ளனர்.

News September 30, 2025

2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

image

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.

News September 30, 2025

விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள்

image

கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. இதை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ, அந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது, பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர்.

error: Content is protected !!