News September 30, 2025

BREAKING: கட்சி பதவியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

image

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களின் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 பேரை பதவியில் இருந்து EPS நீக்கியுள்ளார்.

Similar News

News September 30, 2025

உங்கள் உணவில் புரோட்டீன் இருக்கா?

image

தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். உங்கள் உணவில் புரோட்டீன் இல்லையென்றால், உடல் பலவீனம், தசை இழப்பு, சோர்வு போன்ற விளைவுகள் ஏற்படலாம். உங்கள் உணவில் புரோட்டீன் உள்ளதை உறுதி செய்யுங்கள். மேலே, புரோட்டீன் அதிகம் உள்ள சில உணவுகளை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News September 30, 2025

ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட ‘Zoho mail’

image

Zoho-வின் ‘Arattai’ ஆப் போலவே, ‘Zoho Mail’-ம் மக்களால் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை, 10 லட்சம் யூஸர்கள் மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 50 லட்சத்தை கடந்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டுமென PM மோடி சொன்னதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தானும் ‘ZohoMail’-க்கு மாறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 30, 2025

போலீஸிடம் இருந்து பெண்களை காப்பாற்றும் நிலை உள்ளது: EPS

image

திருவண்ணாமலையில் இரு காவலர்கள், இளம் பெண்ணை அவரது சகோதரி கண் முன்னரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே, தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு, பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!