News September 30, 2025
BREAKING: கட்சி பதவியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களின் பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 பேரை பதவியில் இருந்து EPS நீக்கியுள்ளார்.
Similar News
News March 16, 2026
ELECTION: 3 நாள்கள் விடுமுறை..

மார்ச் 30 முதல் ஏப்.6-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று TN தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்.3 புனித வெள்ளி, ஏப்.5 ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் பொதுவிடுமுறை என்பதால், அந்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது; மற்ற அனைத்து நாள்களிலும் தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
தனித்தனி ரூட்டில் செல்லும் அதிமுக, தவெக!

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க நினைத்த டெல்லி தலைமையின் முயற்சி பலனளிக்கவில்லை என தெரிகிறது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் EPS, விஜய் இருவரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததே கூட்டணி சேர முடியாமல் போனதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த தவெக, இன்று, <<19396552>>நாங்கள் கூட்டணி பேசவில்லை<<>> என அறிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 16, 2026
கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்ற ஆஃபருடன் அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக, அதிமுக, சசிகலா, ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. மேலும், யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


