News September 30, 2025
சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News September 30, 2025
சென்னை: 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு EMAIL மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ரஷ்ய நாட்டு தூதரகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் மும்பையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News September 30, 2025
மக்களிடம் நடந்தது குறித்து கேட்க உள்ளோம்: MPக்கள் குழு

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய ஹேமமாலினி MP தலைமையில் ஒரு குழுவை பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த குழு இன்று தமிழகத்துக்கு வந்தடைந்துள்ளது. கரூரில் அன்று உண்மையாகவே நடந்தது என்ன என்பது குறித்தும் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்க உள்ளதாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 30, 2025
தவெக எந்த தவறும் செய்யவில்லை: N.ஆனந்த்

கரூர் விவகாரத்தில் தவெக எந்த தவறும் செய்யவில்லை என மதுரை HC-ல் ஜாமீன் கோரி N.ஆனந்த் மனு அளித்துள்ளார். அதில், கூட்டத்திற்கு குழந்தைகள், பெண்கள் வரவேண்டாம் என முன்கூட்டியே கூறியதாகவும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை கடமை தவறிவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் பொறுப்பேற்க முன்வரவில்லை என கண்டனங்கள் வலுக்கும் நிலையில், தங்களுடைய தவறு எதுவும் இல்லை என தவெக கூறியிருக்கிறது.