News September 30, 2025
சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News March 30, 2026
விரலில் அடிபட்டா கைரேகை மாறுமா?

போன் Lock முதல் பயோமெட்ரிக் வரை இன்றியமையாததாக இருக்கும் கைரேகை கையில் அடிப்பட்டாலோ, தீக்காயம் ஏற்பட்டாலோ கைரேகை மாறுமா என்ற கேள்வி எழலாம். அறிவியலின் படி, ஆசிட் பட்டாலும் கைரேகை மாறாதாம். கருவில் உருவாகும் கைரேகை வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்குமாம். உடல்எடை கூடியோ, குறைந்தாலோ ரேகையின் அளவு மாறுமே தவிர டிசைன் மாறாதாம். காயம் ஏற்பட்டு அழிந்தாலும் கூட, சில மாதங்களில் அதே டிசைனுடன் வளருமாம்.
News March 30, 2026
ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின், விஜய்

கொளத்தூரில் ஸ்டாலினும், பெரம்பூரில் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, ஒரே நேரத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். பரப்புரை வாகனத்தில் பயணிக்கும் இருவரையும் மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2026 தேர்தலில் ஸ்டாலினுக்கும் தனக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருந்த நிலையில், 2 CM வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளது TN அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
விஜய்க்கு எதிராக போட்டியிடும் திலகபாமா.. யார் இவர்?

விஜய் களமிறங்கும் பெரம்பூரில் PMK பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. 2021-ல் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவரால் 30 ஆயிரம் வாக்குகளை கூட பெறமுடியாமல் டெபாசிட் இழந்தார். இந்த சூழலில் பரிச்சயம் இல்லாத பெரம்பூரில் திலகபாமாவை களமிறக்கி உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


