News September 30, 2025
தஞ்சை: மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு

சீராளூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த 28ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகம் வந்தாக கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயர்ந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
தஞ்சை: விசிகவினர் மீது பாமகவினர் புகார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு விசிக சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பாமக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலினை கைது செய்யக்கோரி விசிக மு.மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று பாமகவினர் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் விவேகானந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
News March 11, 2026
தஞ்சை: மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே மருதாநல்லூரைச் சேர்ந்தவர் தமிழரசி (55). இவர் நேற்று பனை மட்டை எடுக்க சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியைத் தவறுதலாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் னழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 11, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


