News September 30, 2025

கரூர் வருகிறார் கே.சி.வேணுகோபால்

image

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சந்திக்கிறார். இதற்காக காலை 9.20 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், பகல் 12 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். தொடர்ந்து மாலை கட்சி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய நிலையில், வேணுகோபாலின் வருகை அரசியல் கவனம் பெற்றுள்ளது.

Similar News

News September 30, 2025

முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

image

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 30, 2025

டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

image

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

RECIPE: தினை ஆப்பம் செய்வது எப்படி?

image

*தினை, இட்லி அரிசி, உளுந்து & வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும் *இதில், துருவிய தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும் *பச்சரிசியை தனியாக ஊறவைத்து, மோர் பதத்திற்கு அரைக்கவும் *இதை மிதமான தீயில் கிளறி, மாவு பசை பதத்திற்கு இறுகும் போது, உப்பு சேர்க்கவும் *இது ஆறிய பிறகு, அரைத்த ஆப்ப மாவுடன் இதனை சேர்க்கவும் *இதை மிருதுவதாக சுட்டு எடுத்தால், சுவையான தினை ஆப்பம் ரெடி. SHARE.

error: Content is protected !!