News September 29, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. 3 பேர் அதிரடி கைது

கரூர் சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாவில் வதந்தி பரப்பியதாக BJP-ன் சகாயம், தவெகவை சேர்ந்த சிவனேஸ்வரன், சரத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவிட்ட 25 சோசியல் மீடியா கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 7, 2025
இப்போதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு: கோலி Open Talk

தெ.ஆ., உடனான தொடரில் தான் விளையாடிய விதம் தனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 2-3 வருடங்களில் தான் இப்படி விளையாடியதே இல்லை என கூறிய அவர், இப்போதுதான் மனதளவில் ஃப்ரீயாக உணர்வதாக கூறியுள்ளார். மேலும், களத்தில் தான் சிறப்பாக பேட்டிங் செய்தது இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
ஆவேசத்திற்கு தயாரான சூர்யா!

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜையில் அவருடன் நாயகி நஸ்ரியா, மலையாள நடிகர் நஸ்லேன் போன்றோரும் கலந்து கொண்டனர். ‘சிங்கம்’ பட சீரிஸுக்கு பிறகு, இந்த படத்தில் மீண்டும் காக்கி உடையை சூர்யா அணியவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவே, ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
News December 7, 2025
என்னிடம் எந்த பாட்சாவும் பலிக்காது: CM ஸ்டாலின்

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களை அறிவித்த CM ஸ்டாலின், நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுவதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். மேலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அவர்கள் பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது’ என்றும் தெரிவித்தார்.


