News September 29, 2025
கரூர் சம்பவம்: மேலும் ஒரு வழக்கு பதிவு

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் கெளதம் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News September 29, 2025
மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.
News September 29, 2025
கரூர் துயரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: GK வாசன்

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுப்பதில்லை என ஜிகே வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பரப்புரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை காப்பாற்ற உயர்வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
News September 29, 2025
Ration Card-ல் பெயர் சேர்க்கணுமா? 5 நிமிஷம் போதும்

<