News September 28, 2025

நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் விஜய்

image

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், விஜய் சென்னை திரும்பிவிட்டார். அவர் நேரில் சென்று ஆறுதல் கூறாவிட்டால் மக்களிடம் எதிர்மறை எண்ணம் ஏற்படும் என TVK-வினர் கருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News December 8, 2025

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவியர்களுக்கான, இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.12.2025 முதல் 12.12.2025 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News December 8, 2025

வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

News December 8, 2025

புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!