News September 28, 2025

நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் விஜய்

image

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல் கூறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், விஜய் சென்னை திரும்பிவிட்டார். அவர் நேரில் சென்று ஆறுதல் கூறாவிட்டால் மக்களிடம் எதிர்மறை எண்ணம் ஏற்படும் என TVK-வினர் கருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 8, 2025

BREAKING: ரஜினிகாந்த் அண்ணனுக்கு மாரடைப்பு

image

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை பெங்களூருவில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். தனது சகோதரர் சீரியஸாக இருப்பதை அறிந்ததும், அவரை சந்திக்க ரஜினி பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சினிமா கரியரில் ரஜினியை வழிநடத்திய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

வாக்காளர் கணக்கெடுப்பில் குழப்பமோ குழப்பம்

image

SIR பணிகள் ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. SIR படிவம் விநியோகம் செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும், பல இடங்களில் படிவம் விநியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை எனவும் வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும், போதுமான பயிற்சி இல்லாததால், படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.

News November 8, 2025

தமிழகம் முழுவதும் தியாகச் சுவர்: அமைச்சர் மா.சு

image

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும் என்று அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச் சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர்; அந்த வகையில் ஸ்டாலின் 2009-ம் ஆண்டே உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!